இந்து சமயம் பகுதி-7


இந்து சமயம் பகுதி-7
அடுத்த நிலையில் இந்த முடிவைப்பற்றிய சந்தேகம் வந்துவிடுகிறது. சூன்யத்திலிருந்து பொருள் எவ்வாறு தோன்ற முடியும்? வேதாந்தத்தின் முதற்படியிலேயே இந்தக் கேள்வி எழுகிறது. இந்தப் பிரபஞ்சம் இருப்பது உண்மையானால் இருக்கும் ஏதாவது ஒன்றில்தான் இது தோன்றியிருக்க முடியும். ஏனெனில் சூன்யத்திலிருந்து எதுவும் எங்கும் தோன்ற முடியாது என்பது நன்கு தெரிந்த ஒன்று . மனிதர்கள் செய்யும் எல்லா தொழில்களுக்கும் பொருட்கள் தேவைப்படுகின்றன. வீடு ஒன்று கட்டப்பட்டியிருந்தால் அதற்கு வேண்டிய துணைக்கருவிகள் முன்பே இருந்தன. ஒரு படகு கட்டப்பட்டிருக்குமானாலும் அப்படியே ; எது செய்யப்பட்டிருந்தாசலும் அப்படியே . ஏற்கனவே உள்ள காரணங்களால் தான் ஒரு காரியமாக உருவாகிறது. எனவே சூன்யத்திலிருந்து இந்தப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்னும் கொள்கை கைவிடப்பட்டது.

இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுவதற்குக் காரணமான மூலப்பொருள் ஒன்று தேவைப்பட்டது. இந்த மூலப்பொருள் பற்றிய ஆராய்ச்சியே உலக சமயங்களின் வரலாறு ஆகும். எதிலிருந்து இவையெல்லாம் படைக்கப்பட்டது? கடவுளே மூலகாரணம் என்பதையும் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதையும் சற்று விலக்கிவிட்டுப் பார்த்தால் , பிரச்சினைகளுள் பெரும் பிரச்சினையாக இருப்பது இதுதான் : எந்தப் பொருளிலிருந்து கடவுள் இதைப் படைத்தார்? எல்லா தத்துவங்களும் இந்த ஒரு கேள்வியையே சார்ந்திருப்பது போல் உள்ளன.

இயற்கை இறைவன் ஆன்மா ஆகிய மூன்றும் என்றென்றும் உள்ளன என்றும் கொள்கை இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடை. என்றும் ஓடுகின்ற மூன்று இணைகோடுகள் உள்ளன. அவற்றுள் இறைவன் என்ற கோடு எந்தச் சார்பும் அற்ற உண்மை ; இயற்க்கை ஆன்மா என்னும் மற்ற இரண்டு கோடுகளும் கடவுளைச் சார்ந்தவை ஜடப்பொருள் மூலக்கூறுகள் ஒவ்வென்றும் இறைவனையே சார்ந்திருப்பதுபோல் , ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனின் சித்தத்தையே முற்றிலும் சார்ந்திருக்கிறது.

மற்ற படிகளை ஆராயத் தொடங்குமுன் நாம் ஆன்மா என்னும் கருத்தை எடுத்துக் கொள்வோம். பின்னர் வேதாந்தத் தத்துவ ஞானியர் ஒரு விடீஷயத்தில் மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தியாவில் வேதாந்தத்திகள் எல்லோருக்கும் பொதுவான மனஇயல் ஒன்றுள்ளது. அவர்களது தத்துவம் எதுவானலும் மனஇயல் சாஸ்திரம் ஒன்றுதான். அது மாங்கியர்களின் மன இயல் சாஸ்திரம்.

ஒரு பொருளைப்பற்றிய அறிவு எப்படி ஏற்படுகிறது என்பதை சாங்கியம் பின்வருமாறு கூறுகிறது. புறப்பொருளின் அதிர்வுகள் வெளிப்பொறிகளை அடைகின்றன. வெளிப்பொறிகளிலிருந்து புலன்கள் அல்லது உட்கருவிகளுக்கு இவை போதிக்கின்ற; இங்கே யிருந்து மனத்தை அடைகின்றன; பிறகு புத்தியை அடைகின்றன. புத்தியிலிருந்து ஆன்மா எனப்படும் ஒருமையை அடைகின்றன. பலவகை உணர்ச்சிகளுக்கும் காரணமான நரம்பு மையங்கள், பிறகு உயர்ந்த நிலை மையங்கள். இந்த இரண்டும் நாம் கூறுகின்ற புலன்கள் மற்றும் மனம் என்பவற்றிற்குச் சரியாகப்பொருந்திவருகின்றன. ஆனால் எல்லா மையங்களையும் அடக்கியாளும் மூல மையம் ஒன்றே உடலியல் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே இந்த மையங்கள் எல்லாம் ஒன்றுபடுத்தும் மூலம் எது என்பதைத் தற்கால உடலியல் விளக்க இயலாது. இந்த மையங்களெல்லாம் ஒன்றுபடும் இடம் எது? மூளைகளி லுள்ள மையங்களெல்லாம் தனித்தனியானவை . எல்லா மையங்களையும் அடக்கியாளும் மூல மையம் ஒன்று அங்கே இல்லை. எனவே இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இந்தியா மனஇயல் ஈடிணையற்றதாக நிற்கிறது. புறப்பொருட்களைப் பற்றியே நமது அறிவு நிறைவடைய வேண்டுமானால் புலன் உணர்ச்சிகள் எல்லாம் ஒன்றுபடுவதற்கு நிலைக்களன் ஒன்று இருந்தே தீர வேண்டும் . இந்த மூல நிலைக்களன் இல்லாமல் நான் உங்களைபற்றியோ, ஒரு படத்தைப்பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ எதனையும் அறிய முடியாது. இந்த ஒன்றுபடுத்தும் நிலைக்களன் இல்லை என்றால் நாம் முதலில் பார்க்க வேண்டியிருக்கும், பின்னர் சிறிது நேரம் கழித்து மூச்சுவிட வேண்டம் பின்னர் கேட்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டியிருக்கும். ஒருவர் பேசுவதைக் கேட்டும் போது அவரைப் பார்க்க இயலாது; கேட்டும்போது பார்க்க முடியாது. ஏனெனில் மையங்கள் தனித்தனி அல்லவா?

ஜடப்பொருள் எனப்படும் மூலக்கூறுகளால் ஆனது இந்த உடல். இது மந்தமானது, உணர்வற்றது. வேதாந்திகள் நுண்ணுடல் என்று சொல்வதும் இப்படித் தான் இருக்கிறது. அவர்களது கருத்துப்படி நுண்ணுடலும் ஜடப்பொருளே. ஆனால் அது ஒளி ஊடுருவும் தன்மையுடையது; நுண்ணிய மூலக்கூறுகளால் ஆனது இந்த மூலக்கூறுகளை உருப்பொருக்கியால் கூடப்பார்க்க முடியாது . இந்த நுண்ணுடலால் என்ன பயன்? இதுவே நுண் சக்திகளின் கொள்கலனாக உள்ளது. தூலவுடல் தூல சக்திகளின் கொள்கலனாக இருப்பது போல், நுண்ணுடல் நாம் எண்ணங்கள் என்று சொல்பவற்றின் பல வேறுபாடுகளாகிய நுண் சக்திகளின் கொள்கலனாக உள்ளது.

முதலில் தூலப் பொருளால் ஆன உடல் இது தூல சக்திகளுக்கு இருப்பிடம். தூலப் பொருள் இல்லாமல் சக்தி இருக்க முடியாது. அது தங்கி நிற்க ஏதாவது ஒருவகைத் தூலப்பொருள் அவசியம். எனவே தூல சக்திகள் தூலப் பொருளான உடலில் செயல்படகின்றன. இந்தச் சக்திகளே நுண் சக்திகள் ஆகின்றன. தூல உருவில் செயல்படும் சக்திகளே நுண்ணுருவில் செயல்படும் சக்திகளாக மாறி எண்ணங்கள் ஆகின்றன. தூல சக்திக்கும் நுண் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லை . ஒரே பொருளின் தூல வெளிப்பாடு ஒன்று ; நுண் வெளிப்பாடு மற்றொன்று. இதோபோல் தூல உடல் மற்றும் நுண்ணுடல்களுக்கும் இடையிலும் வேறுபாடு ஒன்றும் இல்லை. சூட்சும உடலும் ஜடப்பொருளால் ஆனதுதான்; ஆனால் இது மிகவும் நுண்ஜடப்பொருள். தூல சக்திகளைச் செயல்படச் செய்யும் கருவி தூலவுடல். அதுபோல் சூட்சும சக்திகளைச் செயல்படச் செய்யும் கருவி நுண்ணுடல்.

இந்தச் சக்திகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன? வேதாந்தத் தத்துவத்தின்படி இயற்கையில் இரண்டு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று ஆகாசம். இது மிகமிக நுட்பமான ஜடப்பொருள். மற்றொன்று பிராமணன். இது சக்தி. பார்த்தால், கேட்டல், உணர்தல் என்று புலன்களால் அறியப்படும் காற்று, மண் போன்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் ஆகாசத்தால் உருவானவை. பிராணனின் செயலால் இவை மிகமிக சூட்சுமமாகவோ அல்லது மிகமிகத் தூலமாகவோ மாறிக்கொண்டே போகின்றன. ஆகாசத்தைப் போலவே பிராமணனும் எங்கும் நிறைந்தது; எல்லாவற்றையும் ஊடுருவி நிற்பது. ஆகாசம் தண்ணீர் போன்றது; பிரபஞ்சத்திலுள்ள மற்றவை யெல்லாம் அந்தக் தண்ணீரால் ஆக்கப்பட்டு அதன்மீது மிதக்கும் பனிக்கட்டிகள் போன்றவை . இப்படி ஆகாசத்தைப் பல உருவங்களாக மாற்றும் சக்தியே பிராமணன். தசைநார்களின் இயக்கம், நடப்பது, அமர்வது, பேசுவது போன்ற தூலச் செயல்களாகப் பிராணன் மாறுவதற்கு நிலைக்களனான தூலவுடல் ஆகாசத்திலிருந்து உண்டாக்கப்பட்டதாகும். அதே பிராணன் நுட்ப உருவமான எண்ணமாக மாறுவதற்கு ஆதாரமான சூட்சும உடலும் ஆகாசத்தின் சூட்சும உருவத்திலிந்து ஆக்கப்பட்டதே ஆகும்.

எனவே முதலில் தூலவுடல், அதற்கு அப்பால் நுண்ணுடல் அல்லது சூட்சும உடல்; அதற்கும் அப்பால் ஜீவன் அல்லது உண்மை இருக்கிறான் . தூல உடலுக்கும் நுண்ணுடலுக்கும் உள்ள தொடர்பு நகத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் போன்றது நகங்களை நாம் பலமுறை வெட்டி எறிய முடியும் , ஆனாலும் அவை உடலின் பாகங்களே . ஒரு மனிதனுக்குச் சூட்சும உடல், தூலவுடல் என இரண்ட உடல்கள் இல்லை. உடம்பு ஒன்றுதான் . நெடுநாள் அழியாமல் நிலைத்திருப்பது நுண்ணுடல் ; விரைவில் அழிந்து போவது தூலவுடல். எப்படி என் நகத்தை நான் பலமுறை வெட்ட முடியுமோ அப்படியே இந்தத் தூலவுடலையும் நான் பல லட்சம் தடவை உதறிவிட முடியும்; ஆனால் நுண்ணணுடல் நிலைத்து நிற்கும் . துவைதிகளின் கொள்கைப்படி , ஜீவன் மிகவும் நுட்பமானவன் ; அணு போன்றவன்.

விரைவில் அழியும் தூலவுடலை முதலிலும், கோடிக்கணக்கான ஆண்டுகள் அழியாத நுண்ணுடலை அதற்கு அப்பாலும் அதற்கும் அப்பால் ஜீவனையும் கொண்ட ஒருவஜேன மனிதன் என்பதை நாம் இதுவரையில் பார்த்தோம் எவ்வாறு இறைவன் என்றென்றும் உள்ளவனோ, அப்பாறே ஜீவன் ஆதியும் அந்தமும் அற்றவன் என்கிறது வேதாந்தம். இது போன்றதுதான் இயற்கையும்; ஆனால் இது மாறக்கூடியது. இயற்கையின் மூலப் பொருட்களான பிராணனும் ஆகாசமும் என்றும் உள்ளவை, ஆனாலம் அவை தொடர்ந்து புதுப்புது உருவங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஜீவன் ஆகாசத்தாலோ பிராணனாலோ ஆக்கப்பட்ட பொருளல்ல; அது பொருள்தன்மையே இல்லாதது. எனவே அது என்றும் உள்ளது. பிராணன், ஆகாசம் இவற்றின் சேர்க்கையால் ஆனதல்ல ஜீவன். சேர்க்கையின் விளைவாகத் தோன்றாத எந்தப் பொருளுக்கும் அழிவு இல்லை; அழிவு என்பதே மூலப் பொருட்களாகப் பிரிவதுதானே ஆகாசம், பிராணன் இவற்றின் சேர்க்கையால் ஆன தூலவுடல் இந்த மூலப் பொருட்களாகப் பிரிந்துவிடும் ஆனால் தனிப்பொருளான ஜீவன் ஒருபோதும் அழியாது. இதே நியதிப் படிப்பார்த்தால் , ஜீவன் பிறக்கவும் இல்லை. தனிப்பொருளான எதற்கும் பிறப்பு இல்லை மேலே குறிப்பிட்ட அதே நியதி இங்கும் பொருந்தும் சேர்க்கையால் உண்டாகும். பொருளுக்குத்தான் பிறப்பு உண்டு. லட்சக்கணக்கான ஆன்மாக்களாலான இந்தப் பிரபஞ்சம் கடவுளின் சங்கல்பத்திற்கு உட்பட்டது கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் உருவம் இல்லாதவர். அவர் இயற்கையின் வாயிலாக அல்லும் பகலும் செயல்படுகிறார் இயற்கை முழுவதும் அவரது ஆட்சிக்கு அடங்கியது. அவரே என்றும் அரசாள் பவர் இது துவைதிகளின் கூற்று.

இது உண்மையானால் ஒரு கேள்வி எழுகிறது; இறைவனே அரசரானால், அவர் ஏன் இவ்வளவு கொடிய உலகைப் படைத்தார்? நாம் ஏன் இவ்வளவு துன்புற வேண்டும்? அது கடவுளின் குற்றம் அல்ல என்கிறார்கள் துவைதிகள். நம் குற்றத்தாலேயே நாம் துன்பப்படுகிறோம். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். நம்மைத் தண்டிப்பதற்காக அவர் எதுவும் செய்யவில்லை. மனிதன் ஏழையாகவோ, பார்வையற்றவனாகவோ, வேறு குறைகள் உடையவனாகவோ, பிறக்கிறான். இதற்குக் காரணம் என்ன? இப்படிப் பிறப்பதற்குக் காரணமான ஏதோ ஒன்றை இவன் செய்திருக்க வேண்டம். ஜீவன் படைக்கப்படவில்லை; அது என்றுமே இருந்திருக்கிறது; பலவற்றையும் செய்துகொண்டே இருந்திருக்கிறது. நாம் எதைச் செய்கிறோமோ, அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும். நல்லது செய்தால் இன்பம் அனுபவிப்போம், தீமை செய்தால் துன்பம் பெறுவோம். இப்படியே ஜீவன் புண்ணியபாவங்களைச் செய்தவாறு இன்ப துன்பங்களை அனுபவித்தவாறு உழன்று கொண்டே இருக்கிறது.

மரணத்திற்ககுப் பிறகு என்ன நிகழ்கிறது? ஜீவன் இயல்பாகவே தூய்மையானது அறியாமையே அதன் இயல்பை மறைக்கிறது என்று வேதாந்தத் தத்துவவாதிகள் கூறுகிறார்கள். நாவச் செயல்களால் ஜீவன் தன்னை அறியாமையில் மறைத்துக் கொள்வதுபோல், புண்ணியச் செயல்களால் அது மீண்டும் தன் இயல்பை உணர்கிறது அழிவற்றதாக இருக்கிறது. ஒவ்வோர் உயிரின் இயல்பும் தூய்மைதான்.

நற்செயல்களால் பாவங்களும் தவறுகளும் கழுவப்பட்டவுடன் ஜீவன் மீண்டும் தூயதாகிறது. இப்படித் தூய்மை அடைந்த ஜீவன் தேவயானம் எனப்படும் வழியாக செல்கிறது. இதன் பேச்சுப் பொறி மனத்துள் புகுகிறது. வார்த்தைகள் இல்லாமல் சிந்திக்க முடியாது எங்கே சிந்தனை உள்ளதோ, அங்கே வார்த்தைகள் இருந்தே தீரும். சொற்கள் மனத்தில் புகுவதுபோல் மனம் பிராணனிலும் பிராணன் ஜீவனிலும் ஒடுங்குகின்றன. உடனே ஜீவன் உடலைவிட்டு வெகுவிரைவில் வெளியேறி, மேல் உலகங்களுக்குச் செல்கிறது.

இந்தப் பிரபஞ்சம் பல அண்டங்களால் ஆனது பூமி ஓர் அண்டம். இந்த அண்டத்தில் சந்திர்களும் சூரியர்களும் நடசத்திரங்களும் இருக்கின்றன. இதற்கு அப்பால் சூரிய மண்டலமும் அதற்கும் அப்பால் சந்திர மண்டலமும் இருக்கின்றன. அவற்றிற்கும் அப்பால் மின்னல் மண்டலம் என்ற மின்சார மண்டலம் டருக்கிறதாம் . ஜீவன் அந்த மண்டலத்தை அடைந்தவுடன் ஏற்கனவே நிறைநிலையை அடைந்துள்ள மற்றொரு ஜீவன் அதை வரவேற்று பிரம்மலோகம் என்ற மிக உயர்ந்த சொர்க்கத்திற்கு அதை அழைத்துச் செல்கிறது அங்கே சென்ற ஜீவன், பிறப்பு இறப்பு ஒன்றும் இல்லாமல் என்றென்றும் அங்கேயே வாழ்கிறது,அங்கே எல்லா வகை ஆனந்த அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெறுகிறது. படைக்கும் ஆற்றல் மட்டும் பெறுவதில்லை பிரபஞ்சத்தை ஆளும் அதிகாரம் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அவரே கடவுள்.

யாரும் கடவுளாக முடியாது. நான்தான் கடவுள் என்று சொன்னால், அது தெய்வ நிந்தனை என்று துவைதிகள் கூறுகிறார்கள். படைக்கும் ஆற்றலைத் தவிர எல்லா ஆற்றல்களையும் ஜீவன் பெறுகிறது. அது உடல் தரித்து, உலகின் பல பகுதிகளில் உழைக்க விரும்பினால் அப்படியே செய்யலாம். தேவர்களையோ இறந்த முன்னோர்களையோ அந்த ஜீவன் தான் நினைக்கும்போது தன் முன்னே வரவழைக்க முடியும். துன்பம் என்பதே அதற்குச் சிறிதும் இல்லை. அது விரும்பினால் என்றென்றும் பிரம்மலோகத்திலேயே வாழலாம். இவ்வளவு ஆற்றல்களை அது பெறுகிறது. இதுதான்மனிதனின் உயர்ந்த எல்லை . இவன் ஆண்டவனின் அருளைப் பூரண மாகப் பெற்றவன் ; சற்றும் சுயநலம் இல்லாதவன் ; மிகவும் தூய்மையானவன்; ஆசைகள் அற்றவன்; இறைவனிடம் பக்தி செய்வதையும் அவரை வழிபடுவதையும் தவிர வேறு எதையுமே இவன் நாடுவதில்லை.

இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்லாதவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் புண்ணியம் செய்கிறார்கள்; ஆனால் ஏதோ பலனை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் ஏழைகளுக்கு இவ்வளவு கொடுக்கிறோம், எனவே நாங்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இறந்தபின் இவர்களுக்கு என்ன நேரிடுகிறது? சொல் மனத்திலும் மனம் பிராணனிலும் பிராணன் ஜீவனிலும் புகுகின்றன. பிறகு ஜீவன் உடலைவிட்டு வெளிமண்டலத்தை அடைகிறது. அங்கே நெடுநாள், அதாவது அதன் புண்ணிய பலன் இருக்கும் வரையில் இன்பங்களை அனுபவிக்கிறது புண்ணிய பலன் முடிந்ததும் தன் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மீண்டும் இந்த உலகில் பிறக்கிறது. சந்திர மண்டலத்தில் இருக்கும் போது ஜீவன் தேவநிலையில் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். கிறிஸ்தவர் மற்றும் முகமதியர் அது தேதவதூதனாக இருப்பதாகக் கூறுகிறார்கள். தேவர்கள் என்பது சில பதவிகளின் பெயர்கள் ஆகும் . உதாரணமாக தேவர்களின் தலைவனான இந்திரன் என்பது ஒரு பதவியின் பெயர். பல்லாயிரம் மனிதர்கள் இந்தப் பதவியைப் பெற்றுள்ளனர். வேதங்கள் கூறும் கடமைகளுள் மிக உயர்ந்ததைச் செய்யும் புண்ணியவான் தாங்கியவனுடைய புண்ணியம் தீர்ந்து, அவன் இதற்குள் பூமியில் மனிதனாகப் பிறக்கிறான் . இந்த உலகத்தில் அரசர்கள் மாறுவதுபோல் தேவர்களுக்கும் சாவு உண்டு. சொர்க்கத்திலுள்ள எல்லோருக்கும் மரணம் உண்டு. மரணம் இல்லாத இடம் பிரம்மலோகம் ஒன்றுதான். அங்கே பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

ஜீவன் சொர்க்கத்திற்குப் போய் நல்ல போகங்களை அனுபவிக்கிறது. எப்போதாவது அசுரர்களால் தொல்லை ஏற்படும்போது மட்டும் சிறிது துன்பம் உண்டாகும். எங்கள் புராணங்களில் தேவர்களுக்க அவ்வப்போது தொல்லை கொடுக்கும் அசுரர்களைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. எல்லா புராணங்களிலுமே தேவ - அசுரப்போர்களைப்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அசுரர்கள் சிலவேளை தேவர்களை வென்றும் இருக்கிறார்கள். ஆனால் பலவேளைகளில் தேவர்களைப்போல் அவ்வளவு தீய செயல்களை அவர்கள் செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. எல்லா புராணங்களுமே தேவர்கள் பெண்களில் நாட்டம் உள்ளவர்கள் என்று கூறுகின்றன.

எப்படியோ தாங்கள் புண்ணியம் தீர்ந்ததும் அவர்கள் கீழ்நோக்கி வருகிறார்கள். மேகங்கள் வழியாக மழைக்கும் வந்து பின்னர் பூமிக்கு வந்து ஏதாவது ஒரு தானியம் அல்லது செடியில் புகுந்து, கடைசியில் அந்தத் தானியம் அல்லது செடியை மனிதன் உண்ணும்போது மனிதனின் உடலுக்குள் புகுந்து விடுகிறார்கள் . ஒருவனுக்குத் தகுந்த உடலைப் பெறுவதற்கு வேண்டிய மூலப்பொருளைத் தந்தை கொடுக்கிறான் . இந்த பொருள் அவனுக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் , அவன் வேறு உடல்களை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். கொடுங்செயல் செய்யும் பாதகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இறந்த பின் மீண்டும் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். மிகவும் ஈனத்தொழில் செய்யும் சுயவர்களாக இருந்தால், மிகத் தாழ்ந்த மிருகங்களாகவோ செடிகளாகவோ கற்களாகவோ பிறக்கிறார்கள்.

தேவர்களாக இருக்கும் போது ஜீவர்கள் கர்மம் எதையும் செய்வதில்லை. மனிதன் ஒருவன்தான் ஜீவர்கள் கர்மம் எதையும் செய்யவில்லை. மனிதன் ஒருவன் தான் கர்மம் செய்ய இயலும். பலன் தரும் செயல்களே கர்மம் எனப் படுகின்றன. ஒருவன் இறந்து தேவனாகும்போது அவனது புண்ணியச் செயல்களுக்கான சுக அனுபவம் மட்டுமே உண்டு அப்போது அவன் புதிய கர்மம் ஒன்றும் புரிவதில்லை. புண்ணியகர்ம அனுபவம் தீர்ந்தவுடன் மற்ற கர்மங்களின் அனுபவம் தொடங்கிவிடுகிறது; எனவே அவன் பூமிக்கு வருகிறான் ; மீண்டும் மனிதனாகிறான் இந்தப் பூமிக்கு வருகிறான் ; மீண்டம் மனிதனாகிறான் இந்தப் பிறவியில் அவன் சிறந்த புண்ணியங்களைச் செய்து தூயவன் ஆகிவிட்டால் பிரம்மலோகத்திற்குப் போய்விடுகிறான் . பிறகு திரும்பி வருவதே இல்லை போய்விடுகிறான். பிறகு திரும்பி வருவதே இல்லை.

கீழ்நிலை உயிர்களிலிருந்து பரிணாம முறையில் முன்னேறுகின்ற ஜீவர்களின் ஓர் இடைநிலையையே மிருக நிலை. காலப்போக்கில் மிருகம் மனிதனாகிறது. மக்களின் எண்ணிக்கை வளரவளர மிருகங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது கவனித்தற்குரிய ஓர் உண்மை மிருகங்கள் எல்லாம் மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. எத்தனையோ வகை மிருகங்கள் எற்கனவே மனிதர்கள் ஆகிவிட்டன. இல்லையானால் அவை வேறு எங்குதான் பேயிருக்க முடியும்?

வேதங்களில் நரகத்தைப் பற்றிய பேச்சே இல்லை ஆனால் பிற்கால சாஸ்திரங்களாகிய புராணங்கள், நரகங்கள் இல்லாவிட்டால் எந்த மதமுமே பரிபூரணமாகாது என்று கருதி, பலவகையான நரகங்களைக் கண்டு பிடித்தன. இந்த நரகங்கள் சிலவற்றுள் மனிதர்களால் இரண்டாக அறுக்கப்படுகிறார்கள், தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். என்றாலும் அவர்கள் சாவதில்லை. இடையீடில்லாமல் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்! ஆனால் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் நடைபெறும் என்று அந்தப் புராணங்கள் கருணையுடன் கூறுகின்றன. செய்த பாவங்களின் பலனை இப்படி நரகத்தில் அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது . இப்போது அவர்கள் பெறும் உடல் கர்ம சரீரம் எனப்படுகிறது நமது விதியை வகுத்துக்கொள்ள இந்த உடலே உதவுகிறது. ஒரு பெரிய வட்டத்தில் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அந்த வட்டத்தில் இந்த மனித உடல் என்னும் புள்ளியே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கருவி. எனவே ஜீவன் ஏற்கும் எண்ணப்படுகிறது மனிதன் தேவர்களைவிட உயர்ந்தவன்.

இதுவரையிலும் கலப்பற்ற, சிக்கலில்லாத , துவைதத் தத்துவத்தைப் பார்த்தோம். ஆனால் மேலே கூறியது போல் இருக்க முடியாது என்று இன்னும் சற்று உயர்ந்த வேதாந்தத் தத்துவம் கூறுகிறது. கடவுளே இந்த உலகிற்கு மூலப் பொருளாகவும் மூல ஆற்றலாகவும் இருக்கிறார். எல்லையற்ற கடவுள் ஒருவரும், அதே தன்மையுள்ள ஆன்மா ஒன்றும், அதே தன்மையுள்ள இயற்கை ஒன்றும் இருப்பதாகச் சொன்னால் , இப்படியே முடிவில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம். இதனை ஒத்துக் கொள்ள முடியாது. தர்க்க நியாத்திற்கெல்லாம் இங்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே கடவுளே பிரபஞ்சத்திற்கு மூலப் பொருளாகவும் மூல ஆற்றலாகவும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. தம்முள்ளிருந்தே அவர் பிரபஞ்சத்தை வெளிப்படுத்துகிறார் அப்படியானால், கடவுளே எப்படிச் சுவர்களும் மேஜைகளும் பன்றிகளும் கொலைகாரர்களும் இன்னும் உலகிலுள்ள கொடிய பொருட்களும் ஆனார்? கடவுள் தூயவர் என்று நாம் சொல்கிறோமே இப்படித் தூய்மையற்ற பொருட்களாக எல்லாம் அவர் எப்படி ஆக முடியும் விடை இதுதான் நான் ஓர் ஆன்மா ; எனக்கு உடல் இருக்கிறது. ஒருவகையில் இந்த உடல் என்னில் வேறுபட்டதல்ல. என்றாலும் நான் அதாவது உண்மை நான் இந்த உடம்பல்ல இப்படித்தான் அதுவும்.

உதாரணமாக நான் ஒரு குழந்தை, நான் ஓர் இளைஞன் , நான் கிழவன் என்றெல்லாம் சொல்கிறேன் ஆனால் என் ஆன்மா மாறவே இல்லை. அது ஒரே ஆன்மாவாகவே இருக்கிறது. இதுபோலவே இயற்கை கணக்கற்ற ஆன்மாக்கள் என்றெல்லாம் ஆன இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் எல்லையற்ற உடல் போலவே இருக்கிறது. அவர் எல்லாவற்றுள்ளும் நிறைந்திருக்கிறார். கடவுள் ஒருவரே எல்லாவற்றுள்ளும் நிறைந்திருக்கிறார். கடவுள் ஒருவரே மாறாதவர். இயற்கையும் ஆன்மாக்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாறுதல்களால் இறைவன் பாதிக்கப்படுவதில்லை. இயற்கை எந்த விதத்தில் மாறுகிறது? உருவங்களில் தான். அது புதுப்புது உருவங்களை எடுத்துக்கொள்கிறது. ஆன்மா டவ்வாறு மாற டயலாது. ஆன்மா அறிவில் சுருங்கவும் பவிரியவும் செய்கிறது. பாவச் செயல்களால் அது சுருங்குகிறது. ஆன்மாவின் இயல்பு பற்றிய உண்மை யான அறிவையும், அதன் தூய்மையையும் குறைக்கும் செயல்கள் பாவச் செயல்கள். ஆன்மாவின் இயற்கைப் பெருமையை விளக்குபவை புண்ணியச் செயல்கள். இந்த ஆன்மாக்கள் அனைத்தும் தூயவையாக இருந்தவைதாம். ஆனால் சுருங்கிவிட்டன. இறையருளாலம் புண்ணியச் செயல்களாலும் இவை விரிவடைந்து தங்கள் பழைய தூய நிலையை அடைந்துவிடும். காலப்போக்கில் ஒவ்வொருவரும் இந்தப் பிரபஞ்ச வட்டத்திலிருந்து விடுதலை பெற்றேயாக வேண்டும். அதற்கான வாய்ப்பும் ஒவ்வொருவருக்கும் சமமாகவே கடைக்கிறது. என்றாலும் இந்தப் பிரபஞ்சம் முடிவுற்றுவிடாதது, இது இரண்டாவது கொள்கைப்படி இறைவன் , ஆன்மா இயற்கை என்னும் மூன்று இருக்கின்றன. ஆன்மா, இயற்கை இறைவனின் திருமேனியாக இருக்கின்றன. எனவே இந்த மூன்றும் ஒரு தொகுதி. இது மத முன்னேற்றில் அடத்த படி யாகும். இதற்கு விசிஷ்டாத்வைதம் என்று பெயர். துவை தத்துவத்தின் தத்தின் படி பிரபஞ்சம் கடவுளால் இயக்கப்படும் ஓர் எந்திரம். விசிஷ்டாத்வைத்தின் படி பிரபஞ்சம் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ள ஓர் உயிர்ப்பொருள்.

கடைசியில் வருவது அத்வைதம். இறைவன் இந்தப் பிரபஞ்சத்தின் மூலப் பொருளாகவும் மூல ஆற்றலாகவும் இருக்கத்தானே வேண்டும் என்ற கேள்வியை எழுப்பு கிறார்கள் அத்வைதிகள் . அப்படியென்றால் இறைவனே இந்தப் பிரபஞ்சமாக ஆகியிருக்கிறார் என்றாகிவிடுகிறது. இதற்கு எதிர்பேச்சு இல்லை . இறைவனே ஆன்மா பிரபஞ்சம் அவரது உடல் உடல் மாறிக்கொண்டே இருக்கிறது; ஆனால் இறைவன் மாற்றம் இல்லாதவர்கள் என்று மற்றவர்கள் பிதற்றல் என்கிறார்கள்.

அப்படியானால் இந்த உலகத்தின் மூலப்பொருள் இறைவனே என்று சொல்வாதால் என்ன பயன் ? மூலப்பொருள் என்பது மூல ஆற்றலாகிய கார்ணத்தின் காரியம் அவ்வளவே. காரியம் என்பது காரணத்தின் மற உருவம் என்பதை உணர்கிறோம் பிரபஞ்சம் காரியமாகவும், இறைவன் காரணமாகவும் இருப்பதாகக் கொண்டால் இறைவனின் வேறு உறுவே பிரபஞ்சம்.

இந்தப் பிரபஞ்சமே இறைவனின் உடல் இந்த உடல் தூலத்தன்மையிருந்து சுருங்கிக்சுருங்கி, நுட்பத்தன்மை பெற்றுப் பிரபஞ்சத்திற்கு மூல காரணம் ஆகிறது என்று பிறர் சொன்னால் அத்வைதிகள், இறைவனே இந்தப் பிரபஞ்சமாகிறார் என்கிறார்கள்.

இப்போது ஒரு நுட்பமான கேள்வி எழுகிறது. இறைவனே பிரபஞ்சம் என்றால் , நாமும் நாம் காணும் எல்லா பொருள்களுமே இறைவன் தானே! ஆம் . இந்தப் புத்தகமும் இறைவன், எல்லாம் இறைவன் ; என் உடல் இறைவன் , என் மனம் இறைவன் , என் ஆன்மா இறைவன் அப்படியானால் பல உயர்கள் ஏன் இருக்க வேண்டும் ? இறைவனே இந்த லட்சக் கணக்கானவர்களாகப் பிரிந்துவிட்டாரா? அந்த ஒரே கடவுள் இப்படிப் பல லட்சம் உயிர்களாக மாறிவிட்டாரா? இல்லாவிட்டால் எப்படி இத்தனை உயிர்கள் உண்டவனார்கள்? பரிபூரணமான ஆற்றலும் பொருளும் ஆன பிரபஞ்சத் தின் ஒரே பொருளான அந்தக் கடவுள் இப்படிப் பலவாகப் பிரிந்தது எப்படி? எல்லையற்றதைப் பிரிக்கவே இயலாது. தூய்மையான இறைவன் பிரபஞ்சமானது எப்படி? அவரே பிரபஞ்சமானார் என்றால் அவர் இயற்கையின் ஒரு பகுதியே ஆவார்; இயற்கையாகவும் மாறும் இயல்புடையதாகவும் உள்ள பொருளுக்குப் பிறப்பு இறப்பு இரண்டும் உண்டு . நம் இறைவனும் மாறும் இயல்புடையவர் என்றால் அவர் ஒரு நாள் அழிந்தே தீர வேண்டும். இதை நன்றாகக் கவனியுங்கள்.

சரி கடவுளின் எவ்வளவு பகுதி இந்தப் பிரபஞ்ச மாகியுள்ளது?அது அ என்னும் பகுதி என்றுவைத்துக்கொண்டால் இப்போது கடவுள் அ என்ற அளவு குறைந்துவிட்டார் ; அதாவது இப்போதுள்ள கடவுள், கடவுள் - அ (கடவுள் கழித்தல் அ). எனவே படைப்புக்குப் பின்பு உள்ள கடவுள் படைப்புக்கு முன்பு உள்ள கடவுளல்ல. ஏனெனில் அவரது ஒரு பகுதிதான் பிரபஞ்சம் ஆகிவிட்டதே!

எனவே அத்தவைதிகள்,பிரபஞ்சம் என்பதே இல்லை; காண்பது வெறும் மாயை. இந்தப் பிரபஞ்சம் தேவர்கள், தேவதைகள் தேவதூதர்கள், இந்த உலகத்தில் பிறந்து சாகும் மற்ற உயிர்கள் , மேலும் கீழுமாக வந்து போய்க் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் எல்லாமே கனவு என்கிறார்கள், ஜீவன் என்பதே இல்லை. எப்படிப் பல ஜீவர்கள் இருக்க இயலும்? எல்லையற்ற ஒன்றுதான் உள்ளது. ஒரே சூரியன் பல நீர் நிலைகளில் பிரதி பலிக்கும்போது பலவாகத் தோன்றுகிறது . பலகோடிசூரியன்களாகக் காட்டுகின்றன; ஒவ்வொரு துளியில் தெரியும் பிம்பமும் சூரியனின் குறைவற்ற பிம்பமே . இப்படிப் பலகோடி பிம்பங்கள் தோன்றினாலும் , உண்மையில் உள்ளது ஒரு சூரியனே . இப்படியே எல்லா ஜீவர்களும் பல மனங்களில் பிரதிபலிக்கும் ஒரே இறைவனே . நீர்த்துளிகளைப்போல் மனங்களும் இந்த ஒரே பூரணப் பொருளைப் பிரதிபலிக்கிறார். கனவு என்றாலும் அதற்கு மூலமான ஓர் உண்மைப் பொருள் இருந்தேயாக வேண்டும் அந்த உண்மைப் பொருளே, எல்லையற்ற பரிபூரணப் பொருளாகிய இறைவன்.

உடல், மனம், உயிர் இவற்றின் சேர்க்கையான நீ வெறும் கனவு. உனது உண்மை வடிவம் உண்மை அறிவு இன்பமே. நீயே இந்தப் பிரபஞ்சத்தை எல்லாம் படைத்து ,மீண்டும் உனக்குள்ளேயே அடக்கிக் கொள்கிறாய். அத்வைதி இப்படித்தான் சொல்கிறான்.

எனவே பிறவிகள் , மறுபிறவிகள் வருவது போவது அனைத்தும் மாயையின் கற்பனைகள். நீ எல்லையற்றவன் நீ எங்கே போக முடியும்? சூரியன் சந்திரன் இந்தப் பிர பஞ்சம் அனைத்தும் எல்லாவற்றையும் அடக்கிய உனது இயல்பில் வெறும் துளிகளே . நீ எப்படிப் பிறக்கவோ இறக்கவோ முடியும்? நான் ஒருபோதும் பிறக்கவும் இல்லை; பிறக்கவும் மாட்டேன் . எனக்குத் தாயோ தந்தையோ, நன்பர்களோ, பகைவர்களோ இருந்த தில்லை. ஏனெனில் நான் பரிபூரணமான உண்மை அறிவு இன்பப் பொருள் . நானே அவன் , நானே அவன்.

இந்த நெறியின் படி எது லட்சியம்? இந்த ஞானம் ஏற்ப்பட்டவன் பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிடுகிறான் அவனுக்கு எல்லா சொர்க்கங்களும் பிரம்மலோகம்கூட இல்லாமல் போய்விடுகிறது, எல்லா கனவும் மறைந்துவிடு கிறது. தானே பிரபஞ்சத்தின் என்றென்றுமுள்ள இறைவன் என்பதை அவன் உணர்கிறான் . அவன் தனது உண்மையான தனித்துவமாகிய உண்மை - அறிவு - இன்பம் என்பதை அடைந்து சுதந்திரனாகிறான் . சிறு பொருட்களில் இன்பம் காண்பது மறைந்துவிடுகிறது. இந்தச் சிறு உடலின் மூலமும் இந்தச் சிறு தனி உயிரின் மூலமும் தான் நாம் இப்போது இன்ப அனுபவம் கிடைக்கும் ! ஓர் உடலுடன் இருக்கும்போதே இன்பம் உண்டானால், எல்லா உடல்களும் என்னுடையனவாக இருக்கும்போது எவ்வளவு இன்பம் கிடைக்கும் இந்த நிலையில்தான் முக்தி கிடைக்கிறது. இதுதான் அத்வைத வேதாந்தம்.

வேதாந்தத் தத்துவம் மூன்று படிகள் ஏறியிருக்கிறது. இதற்கு மேல் நாம் போக இயலாது. ஏனென்றால் , எல்லாம் ஒன்றே என்ற ஒருமைக்கு மேல் போவது எப்படி? எந்த விஞ்ஞானமானாலும் , அது ஒருமையை அடைந்து விட்டால் எக்காரணம் கொண்டும் அதற்கு மேல் போக முடியாது. முழுமை என்ற இந்தக் கருத்திற்கு மேல் போக முடியாது. முழுமை என்ற இந்தக் கருத்திற்கு மேல் போக முடியாது.

எல்லோருக்கும் இந்த அத்வைதத் தத்துவத்தை ஏற்றுப் பின்பற்ற இயலாது; இது கடினமானது. முதன்முதலில் இதைச் சாதாரண அறிவால் புரிந்துகொள்வது கடினம். மிகக் கூர்மையான அறிவும் தைரியமும் தெளிவும் இதற்கு அவசியம். இரண்டாவதாக, பெரும்பான்மையான மக்களுக்கு இது ஏற்றதாகவும் இல்லை. அதனால்தான் இந்த மூன்று படிகள் இருக்கின்றன.

முதற்படியில் தொடங்குங்கள். அதில் கருத்தைச் செலுத்தி அதைப் புரிந்துகொண்ட பிறகு இரண்டாம் படிக்குத் தானாகவே வழி திறக்கும். ஓர் இனம் முன்னேறுவது போல்தான் தனிமனிதனும் முன்னேற வேண்டும் மதக் கருத்தின் உச்ச நிலையை அடைய மனிதச் சமுதாயம் எந்தப்படிகளைக் கடந்திருக்கிறதோ, அந்தப்படிகளையெல்லாம் தனி மனிதனும் கடந்து செல்ல வேண்டும். மனத சமுதாயம் ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்கு முன்னேற பலகோடி ஆண்டுகள் சென்றன. ஆனால் தனி மனிதன் மனித இனத்தின் முழு வாழ்வையும் குறைவான கால அளவிலேயே வாழ்ந்துவிடுவான் . ஆனால் எல்லோரும் எல்லா படிகளையும் முறையாகக் கடந்துதான் ஆக வேண்டும்.

உங்களுள் இப்போது அத்வைதிகளாக இருப்பவர்கள் முன்பு தீவிரத் துவைதிகளாக இருந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். நீங்கள் உடலும் மனமுமே என்ற கருத்து இருக்கும் வரையில் இந்தப்பிரபஞ்சக் கனவையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஒரு பிரபஞ்சக் கனவையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஒரு பகுதியை ஏற்றால் முழுவதையுமே ஏற்றுத்தான் தீர வேண்டும். உலகம் இருக்கிறது, ஆனால் உருவக் கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள். உலகம் இருப்பது உண்மையானால், அதற்கு மூலகாரணம் ஒன்று இருந்தேயாக வேண்டும். அதுவே இறைவன். காரியத்தை மட்டும் ஒப்புக் கொண்டு காரணத்தை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தப் பிரபஞ்சம் மறையும் போது கடவுளும் மறைவார். அந்த நிலையில் நீங்களே பரிபூரணப் பரப் பிரம்மம் ஆகிவிடுவீர்கள்; அப்போது உங்களைப் பொறுத்தவறையில் பிரபஞ்சமும் மறைந்துவிடும். நீங்கள் ஓர் உடல் என்ற கனவு மறைகிறதோ, அப்போதே உங்களுக்குப் பிறப்பும் இறப்பும் உண்டு என்ற கனவு மறைந்துவிடும்; பிரபஞ்சம் உண்டு என்ற கனவும் மறைந்துவிடும். நாம் எதைப் பிரபஞ்சமாகக் காண்கிறோமோ, அதை அப்போது பரிபூரணமான இறைவனாகக் காண்போம்; இதுவரையில் நமக்கு வெளியில் இருந்த இறைவனை இப்போது நமக்கு உள்ளே இருப்பவராக , நமது ஆன்மாவாகக் காண்போம்.

5.இந்து சமயம் காட்டும் நான்கு யோகங்கள்

மனித குலத்தில் பெரும்பாலோருக்குத் திருப்தி அளிக்கும் விதமாக ஒரு சமயம் இருக்க வேண்டுமானால் , அது இந்த வேறுபட்ட மனங்களுக்கு இடம் தரவல்லதாக இருக்க வேண்டும். இந்தத் தகுதி இல்லாத இன்றைய நெறிகள் ஒருதலைப் பட்டனவாக இருக்கின்றன. பக்தியையும் உணர்ச்சிப் பெருக்கையும் பிரச்சாரம் செய்கின்ற ஒரு நெறியினரிடம் நாம் போகின்றோம். அவர்கள் பாடுகிறார்கள், அழுகிறார்கள், அன்பைப் போதிக்கிறார்கள் . ஆனால் அவர்களிடம்,நன்பர்களே, இதெல்லாம் சரிதான்; ஆனால் இதைவிட உறுதியான ஏதோ சிறிது அறிவு , சிறிது தத்துவம் இவை எனக்கு வேண்டும். நான் படிப்படியாக, அறிவுபூர்வமாக அனைத்தையும் புரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று சொன்னால் போதும்; போ, வெளியே, என்று கழுத்தைப் பிடித்துத்தள்ளிவிடுவார்கள்;ஏன் , முடிந்தால் மறுவுலகிற்கு அனுப்பவும் தயங்க மாட்டார்கள். உணர்ச்சிப் பாங்கான பக்தர்களுக்கு மட்டுமே இந்த நெறி உதவ முடியும். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யாததுடன் அவர்களை அழிக்கவும் முயல்கிறார்கள், பிறருக்கு உதவ மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, பிறர் உண்மையானவர்கள் என்பதை அவர்கள் நம்புவதும் இல்லை என்பது தான் கொடுமை.

இனி இந்தியா மற்றும் கீழை நாடுகளின் அறிவைப் பற்றி பிரமாதமாகப் பேசுகின்ற தத்துவவாதிகள் இருக்கிறார்கள். ஏதோ ஐம்பது எழுத்துக்கள் கொண்ட பெரிய பெரிய மன இயல் வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவார்கள். ஆனால் என்னைப்போல் ஒரு சாதாரண மனிதன் அவர்களிடம் போய், எனக்கு ஆன்மீகம் வருமாறு ஏதாவது கூற முடியுமா? என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். உடனே ஒரு இளக்காரமான புன்னகையுடன் , ஓ நீ அறிவியல் எங்களை விட மிகவும் தாழ்ந்தவன் ஆன்மீகத்தைப்பற்றி நீ என்ன புரிந்து கொள்ள முடியும்? என்று சொல்வார்கள். இவர்கள் உச்சாணிக் கொம்பில் இருக்கும் தத்துவவாதிகள் வெளியே போங்கள் என்று மரியாதையாகச் சொல்கிறார்கள்.

பிறகு ராஜயோகிகள். பல்வேறு உலகங்கள் மனத்தின் பல நிலைகள், மன ஆற்றலால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்று எதைப் பற்றியெல்லாமோ பேசுவார்கள். ஒரு சாதாரண மனிதன் அவர்களிடம் போய், நான் செய்வதற்கு ஏற்றதாக ஏதாவது சொல்லுங்கள். கற்பனை செய்வத போன்றதில் எனக்கு அதிகப் பழக்கமில்லை . எனக்கு ஏற்புடைய ஏதேனும் ஒன்றை உங்களால் தர முடியுமா? என்று கேட்டால் உடனே கேலியாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். பிறகு, இந்த முட்டாள் சொல்வதைக் கேளுங்கள்; இவனுக்கு எதுவுமே தெரியாது, இவனது வாழ்க்கையே வீண் என்பார்கள். இப்படித்தான் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பல்வேறு நெறிகளைச் சார்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் சேர்த்து ஓர் அறையில் அடைத்து அவர்களின் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இப்போது மதங்களும் மற்றவையும் இருக்கும் நிலைமை இதுதான். ஆனால் எல்லா மனங்களுக்கும் ஏற்புடையதான ஒரு சமயத்தைப் பரப்பவே நான் விரும்புகிறேன். அந்தச் சமயம் தத்துவம் , பக்தி, தியானம் உழைப்பு எல்லாவற்றையும் சமமாக போதிப்பதாக இருக்கும் கல்லூரிப் பேராசிரியர்களும் விஞ்ஞானிகளும் அறிவுபூர்வமாக ஆராய விரும்புவார்கள். வேண்டிய அளவுக்கு அவர்கள் ஆராயட்டும் . ஆனால் முடிவில் இந்த அறிவுபூர்வமான விளக்கங்களுக்கும் ஆராய்ச்சிக்கும் எல்லை இருக்கிறது, அதற்கு அப்பால் அறிவு பயன்படாது என்பதை அவர்கள் உணர்வார்கள், கடவுள் மோட்சம் எல்லாம் மூடநம்பிக்கைகள் , அவற்றை நான் சொல்கிறேன்; திருவாளர் தத்துவவாதியே உங்கள் உடம்பு இருக்கிறதே , அது இவற்றைவிடப் பெரிய மூடநம்பிக்கை. எனவே அதனை விடுங்கள். சாப்பாட்டிற்காக வீட்டிற்கோ, தத்துவ ஆராய்ச்சிக்காக வகுப்புகளுக்கோ போகாதீர்கள் .உடலை விடுங்கள். அது முடியாவிட்டால் கருணைக்காக ஏங்கி அழுங்கள். ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் ஒன்றே, பிரபஞ்சத்தில் உள்ளது ஒன்றே என்று போதிக்கின்ற தத்துவத்தை உணர்வது எவ்வாறு என்று காட்டக் கூடியதாக சமயம் இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,