இந்தியாவின் எதிர்காலம்! (பகுதி-3)


இந்தியாவின் எதிர்காலம்! (பகுதி-3)
அந்தத் திட்டம்தான் என்ன? ஒரு கோடியில் பிராமண லட்சியம். மற்றொரு கோடியில் உள்ளது சண்டாள லட்சியம் நமது வேலையெல்லாம் சண்டாளனைப் பிராமண நிலைக்கு உயர்த்துவதுதான் சிறிதுசிறிதாக அதிகமான சலுகைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை நீங்கள் காணலாம். சில நூல்கள் இருக்கின்றன அவற்றில் சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள்: ஒரு வரிகூட நினைவில் வைத்திருந்தால் அவனது நாக்கை வெட்டுங்கள். பிராமணனைப் பார்த்து ஏ பிராமணா என்று அவன் அழைத்தால் அவனுடைய நாக்கை வெட்டி விடுங்கள் என்பன போன்ற கொடூரமான கருத்துக்கள் இருக்கின்றன இவை மிருகத்தனமான பழங்காலக் காட்டுமிராண்டித்தனம். அதில் சந்தேகமே இல்லை இதை யாரும் சொல்ல வேண்டியது இல்லை. அதற்காக விதிமுறைகளை எழுதியவர்களைப் பழிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் அப்போது சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடைமுறையில் இருந்ததை அப்படியே குறித்து.வைத்தார்கள் அவ்வளவுதான் முன்னோர்களுள்ளும் சிலவேளைகளில் இத்தகைய பிசாசுகள் தோன்றவே செய்தன. அத்தகைய பிசாசுகள் பெரும்பாலும் எங்கும் எல்லா காலங்களிலும் இருந்தே வருகின்றன.

இந்தக் கொடுமைக்குரலின் வேகம் பிற்காலத்தில் சிறிது குறைந்திருப்பதைக் காணலாம்: உதாரணமாக சூத்திரர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். ஆனாலும் உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குப் போதிக்காதீர்கள் என்ற கருத்து வருகிறது பின்னர் படிப்படியாக பிற்கால ஸ்மிறுதிகளில் குறிப்பாக சூத்திரர்கள் பிராமணர்களில் குறிப்பாக இன்னும் முழுமையாகப் பின்பற்றப்படும் ஸ்மிருதிகளில் சூத்திரர்கள் பிராமணர்களின் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால் அது நல்லது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் இது போன்ற கருத்துக்களைக் காண்கிறோம். அதன் போக்கு அப்படி போகிறது.

இந்த விஷயங்களையோ அவற்றை எங்கெல்லாம் தேடிக் காணலாம் என்பதையோ விவரிப்பதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால் இன்றைய உண்மை நிலையைப் பார்க்கும்போது எல்லா ஜாதிகளும் மெல்லமெல்லவே உயர வேண்டியிருப்பதை நாம் காணலாம். ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. அவற்றுள் சில பிராமணத் துவத்தினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். தங்களைப் பிராமணர்கள் என்று ஒரு ஜாதியினர் அறிவித்துக் கொள்வதை யார் தடுக்க முடியும்?

இவ்வாறாக ஜாதி அதனுடைய எல்லா வேகத்தோடும் தோற்றுவிக்கப்பட்டது. இங்கே ஒவ்வொரு ஜாதியிலும் பத்தாயிரம் பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதாகத் தீர்மானித்தால் எதுவும் அவர்களைத் தடுக்க முடியாது இதை என் வாழ்விலேயே கண்டிருக்கிறேன். சில ஜாதிகள் வலிமைபெற்றுவருகின்றன, அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் கூடாது என்று யார் சொல்ல முடியும்? ஏனென்றால் ஒவ்வொரு ஜாதியும் மற்ற ஜாதிகளிலிருந்து விலகியே இருக்கிறது.ஒன்று மற்றதன் செயல்களில் தலையிடுவது இல்லை. ஏன் ஒரே ஜாதியில் பல பிரிவுகள்கூட ஒன்று மற்றொன்றின் விஷயத்தில் தலையிடுவது இல்லை. மாபெரும் சாகப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியரும் பிறரும்தான் ஜாதிகளையும் உருவாக்கியவர்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோதக் கதைகளை எல்லாம் உங்களுக்குச் சொல்ல முடியாது சொன்னாலும் உங்களுள் சிலருக்குக் கோபம் வரலாம். எனது பயணங்ளின்மூலமும் அனுபவங்களின் வாயிலாகவும் அவைகளைக் கண்டுபிடித்து, ஆச்சரியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். சில வேளைகளில் அவர்கள் பலுசிஸ்தானத்தின் நாடோடிக் கும்பல்களைப் பிடித்து க்ஷத்திரியர்கள் ஆக்குவார்கள். மீனவர்களைப் பிடித்து பிராமணர்கள் ஆக்குவார்கள் அவர்கள் ரிஷிகள் மகான்கள். அவர்களின் நினைவிற்கு நாம் அஞ்சலி செய்ய வேண்டுமும் நீங்களும் ரிஷிகள் ஆகுங்கள், மகான்கள் ஆகுங்கள் அதுதான் ரகசியம் மொத்தத்தில் நாம் ரிஷியாக வேண்டும்.

ரிஷி என்றால் என்ன? தூயவர். முதலில் தூயவர் ஆகுங்கள்,நீங்கள் ஆற்றலைப் பெறுவீர்கள். வெறுமனே நான் ரிஷி என்று சொல்லிப் பயனில்லை நீங்கள் ரிஷி என்றால் மற்றவர்கள் தாமாகவே உங்களைப் பணிவார்கள். அனுமானுஷ்யமான ஏதோ ஒன்று உங்களிடமிருந்து வெளிப்படும் அது அவர்கள் உங்களைப் பின்பற்றும்படிச் செய்யும்; தங்களை அறியாமலே தங்கள்விருப்பத்திற்கு மாறாகக்கூட உங்கள் திட்டங்களை நிறைவேற்றும்படிச் செய்யும் அதுதான் ரிஷி நிலை.

இவற்றிக்கான விளக்கங்களைப் பொறுத்தவரை அவை பல தலைமுறைகளாகச் செய்து முடிக்க வேண்டிய ஒன்று. நான் இப்போது கூறியவை, ஜாதிச் சண்டைகள் தீர வேண்டும் என்பதற்கான ஒரு ஆலோசனை மட்டுமே. குறிப்பாக இந்த நவீன காலத்தில் ஜாதிகளுக்கிடையே இவ்வளவு சச்சரவுகள் இருப்பது குறித்து நான் வருந்துகிறேன். இது நிறுத்தப் பட்டே தீர வேண்டும். இந்தச் சண்டை இரு தரப்பினருக்கும், குறிப்பாக உயர்ந்த ஜாதியினரான பிராமணர்களுக்குப் பயனற்றது. ஏனென்றால் இன்று தனிச் சலுகைகளும் தனி உரிமைகளும் பறிபோய்விட்டன. தங்கள் கல்லறையைத் தாங்களே தோண்டிக்கொள்வது தான் ஒவ்வோர் உயர்ந்த பிரிவினருடையவும் கடமை. எவ்வளவு சீக்கிரம் அதைச்செய்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது காலம் நீடிக்கநீடிக்க அவை கெட்டுக் குட்டிச்சுவராகி மிக மோசமான முடிவைப் பெறநேரும்.

எனவே பிராமணர்களின் முதல் கடமை இந்தியாவிலுள்ள மற்ற சமுதாயத்தினரின் நன்மைக்காகப் பாடு படுவதுதான் . அவன் அதைச் செய்வானானால் அதைச் செய்யும் காலம் வரையில் அவன் பிராமணன் அதைச் செய்யாமல் பணம் சம்பாதிக்கத் திரிபவன் பிராமணன் அல்ல. நீங்களும் உண்மையில் தகுதியுடைய பிராமணனுக்கு மட்டுமே உதவ வேண்டும். அது உங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். தகுதி இல்லாத ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம் சிலவேளைகளில் நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லௌகீகத்தொழில் செய்யாமல் இருப்பவன் மட்டுமே பிராமணன். லௌகீகத் தொழில் பிராமணர்களுக்கு அல்ல மற்ற ஜாதியினருக்குத்தான். பிராமணர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததைக் கற்பிப்பதன் மூலமும் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள். உண்மை பிராமணத்துவம் என்ன என்பதை நினைத்துப் பார்ப்பது இந்தியப் பிராமணர்களின் முக்கியக் கடமை. மனு சொல்வதைப் போல், எல்லா சலுகைகளும் பெருமைகளும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டது ஏனென்றால் அவனிடம் தர்மம் என்னும் கருவூலம் இருக்கிறது. அவன் அந்தக் கருவூலத்தைத் திறந்து அதில் உள்ள மதிப்பு வாய்ந்த பொருட்களை உலகிற்கு வழங்க வேண்டும். அவன் இந்திய இனங்களுக்கு முதல் போதகன் என்பது உண்மைதான் தியாகம் என்ற கருத்தைப் பிறர் அடைவதற்கு முன்னரே வாழ்க்கையின் மிகவுயர்ந்த நிலையை அடைவதற்காக எல்லாவற்றையும் முதலில் துறந்தவன் அவன் என்பதும் உண்மையே பிற ஜாதியினரைவிட அவன் அதிக முன்னேற்றம் அடைந்தால் அது அவனுடைய தவறு அல்ல. உண்மையைப் புரிந்து கொண்டு மற்ற ஜாதியினரும் ஏன் அவனைப்போல் செல்லக் கூடாது? அவர்கள் சோம்பேறியாக இருந்து கொண்டு பந்தயத்தில் பிராமணர்களை ஏன் முன்னேற விட்டார்கள்?

ஆனால் முன்னேற்றம் அடைவது என்பது வேறு அதைத் தீய செயல்களுக்காகப் பாதுகாத்து வைப்பது என்பது வேறு அதிகாரம் தீமைகளுக்காகப் பயன்படுத்தபடும்போது அது மிருகத்தனமாகி விடுகிறது, அது நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். காலங்காலமாகச் சேர்ந்து வைக்கப்பட்டுள்ளன பண்பாட்டிற்கு காவலனாக இருப்பவன் பிராமணன் அவன் இப்போது அதை எல்லா மக்களுக்கும் வாரி வழங்க வேண்டும் அப்படி அவன் கொடுக்காததால் தான் முகமதியர்கள் நம்மை ஆக்கிரமிக்க முடிந்தது ஆரம்பக் காலத்திலிருந்தே இந்தக் கருவூலத்தை மக்கள் அனைவருக்குமாக அவன் திறந்து விடவில்லை அதனால் தான் இந்தியாவிற்கு வந்தவனின் காலிலெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மிதிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவே நமது பொது முன்னோர்கள் சேமித்து வைத்திருக்கின்ற அரும் பொக்கிஷங்கள் மறைந்து வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்துத் திறக்க வேண்டும் அவற்றை வெளியே கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் வாரி வழங்க வேண்டும். பிராமணனே இதை முதலில் செய்ய வேண்டும் கடித்த பாம்பே விஷத்தை உறிஞ்சி விடுமானால் கடிபட்டவன் பிழைத்துக் கொள்வான் என்ற பழைய நம்பிக்கை வங்காளத்தில் நிலவுகிறது. அதுபோல் பிராமணன் செலுத்திய விஷத்தை பிராமணனே உறிஞ்ச வேண்டும்.

பிராமணர் அல்லாத நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உண்டு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அவசரப்படாதீர்கள் பிராமணர்களோடு சண்டையிடுவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் தவறுகளாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் முன்னரே எடுத்துக்காட்டி விட்டேன். ஆன்மீகத்தையும் சம்ஸ்கிருதம் கற்பதையும் அலட்சியம் செய்யும் படி உங்களிடம் யார் சொன்னார்கள்? இவ்வளவு காலமாக என்ன செய்து கொண்டிருக்காதீர்கள் ? எதற்கு இந்த பொறுப்பற்ற தன்மை ? இன்று மற்றவர்கள் உங்களைவிட அதிக அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்களாக இருப்பதைப் பார்த்து ஏன் எகிறிக் குதிக்கிறீர்கள் ? பத்திரிகைகளில் வாதங்களையும் சண்டைகளையும் வளர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்குவதற்குப் பதிலாக உங்கள் வீடுகளிலேயே சண்டைகளையும் சச்சரவும் செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக இந்தப் பாவச் செயல்களுக்குப் பதிலாக பிராமணர்கள் பெற்றிருக்கும் பண்பாட்டைப் பெற உங்கள்எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள், அப்போது உங்கள் காரியம் கைகூடிவிடும் ஏன் நீங்கள் சம்கிருத பண்டிதர்கள் ஆகக் கூடாது? இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியினரும் சம்ஸ்கிருதம் படிப்பதற்காகச் சில லட்சங்களை நீங்கள் ஏன் செலவழிக்கக் கூடாது? இதுதான் கேள்வி. இவற்றை யெல்லாம் செய்கின்ற அந்தக் கணமே நீங்கள் பிராமணர்களுக்குச் சமமாகி விடுவீர்கள். இந்தியாவில் ஆற்றலின் ரகசியம் இதுவே. இந்தியாவில் சம்ஸ்கிருதமும் மதிப்பும் கைகோர்த்துச் செல்கின்றன. அது இருந்தால் போதும் உங்களுக்கு எதிராக எதையும் சொல்கின்ற தைரியம் யாருக்கும் வராது. அதுதான் பெரிய ரகசியம். எனவே அதைக் கற்கத் தொடங்கங்கள்.

அத்வைதியின் ஒரு பழைய உவமையின் மூலம் சொல்வது என்றால் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு மயக்க நிலையிலேயே இந்த உலகம் முழுவதும் உழல்கிறது சங்கல்பம்தான் பலம். வலுவான சங்கல்பம் படைத்தவன் தன்னைச் சுற்றிலும் ஓர் ஒளியை வெளிப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும் தன் மனம் எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலைக்கு அவன் பிறரையும் கொண்டு வருகிறான். அத்தகைய மாபெரும் மனிதர்கள் தோன்றவே செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? ஆற்றல் மிக்க ஒருவர் தோன்றும்போது அவரது ஆளுமை அவரது எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது, நமக்கும் அதே எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது நமக்கும் அதே எண்ணங்கள் எழுகின்றன, இவ்வாறு நாமும் ஆற்றல்மிக்கவர்கள் ஆகிறோம் இயக்கங்கள் இவ்வளவு ஆற்றல்மிக்கவையாக இருப்பது ஏன்? இயக்கம் ஜடப்பொருள் என்று சொல்ல வேண்டாம் அவை அப்படிஇல்லை. பிரபலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் நான்கு கோடி ஆங்கிலேயர்கள் இங்கே முப்பது கோடி மக்களை ஆட்சி செய்கிறார்கள். அது ஏன்? இதற்கான மன இயல் விளக்கம் என்ன? அந்த நான்கு கோடி பேரும் தங்கள் சங்கல்பத்தை ஒன்றாகக் குவிக்கிறார்கள். அதனால் எல்லையற்ற சக்தி உண்டாகிறது ஆனால் முப்பது கோடி மக்களான உங்கள் சங்கல்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன எனவே மகத்தானதோர் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதிலும் ஆற்றலைச் சேர்ப்பதிலும் சங்கல்பங்களை இணைப்பதிலும்தான் இருக்கிறது.

அதர்வ வேத சம்ஹிதையில் உள்ளதோர் அற்புத மானபாடல் என் நினைவில் வருகிறது - நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவர்களாக இருங்கள். நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவராக இருங்கள். ஒரே மனத்துடனிருந்த காரணத்தால்தான் தேவர்கள் ஆஹுதிகளைப் பெற முடிந்தது. ஒரே மனத்தவராக இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபட முடிந்தது ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம். திராவிடன் ஆரியன் முதலான அற்ப விஷயங்கள் பற்றியும் பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்றெல்லாமும் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந் தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல் அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல் இதுதான் ரகசியம்.

ஒன்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான் ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது கட்டுக்கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற, பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான் ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. ஒரு நாடு எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. கட்டுப்பாடற்றவர்கள்போல் பிறந்த அந்த மக்களால் ஒன்றாகச் சேரவும்முடிவதில்லை. இந்தக் கருத்துவேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும்.

மற்றொரு குறைபாடும் நம்மிடம் உள்ளது பெண்கள் என்னை மன்னிக்க வேண்டும் - பல நூற்றாண்டுகளின் அடிமை வாழ்வின் காரணமாக நாமெல்லாம் பெண்களைப் போலவே ஆகிவிட்டோம். இந்த நாட்டிலும் சரி வேறு நாட்டிலும் சரி மூன்று பெண்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்திருக்க முடியாது, அதற்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்களை உருவாக்குவார்கள் பெண்சக்தி முதலியவை பற்றியெல்லாம் பெரிய அறிக்கைகளை வெளியிடுவார்கள், அவ்வளவுதான் அதற்குள் சண்டை வந்துவிடும் பின்னர் ஆண்கள் வந்து அவர்களை அடக்கியாள நேரும். இன்னும் உலகம் முழுவதிலும் அவர்களை ஆள்வதற்கு ஆண்கள் தேவைப்படுகிறார்கள். நாம் அவர்களைப் போலவே இருக்கிறோம் நாம் பெண்களே. பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன்வந்தாலோ, எல்லோருமாகச் சேர்ந்து விமர்சித்து, கிழி கிழியென்று கிழித்து அவளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் ஆண் ஒருவன் வரட்டும் அவன் அவர்களை அவ்வப்போது திட்டியதும் சற்று கடினமாக நடத்தியதும் எல்லாம் சரியாகிவிடும் அவர்கள் அத்தகைய மயக்க நிலைக்குப் பழகிவிட்டார்கள். இந்த உலகம் முழுவதும் அத்தகைய மயக்க நிலைக்கு உட்பட்டவர்களே இருக்கிறார்கள். நம் நாட்டிலும் நம்மவருள் ஒருவர் எழுந்து மகத்தானவராக மாற முயற்சிப்பாரானால் உடனே நாம் எல்லோரும் சேர்ந்து அவரை அமுக்க முயற்சிப்பாரானால், ஓர் அன்னியன் வந்து நம்மை எட்டி உதைத்தால் கூட அது பரவாயில்லை. நாம் இப்படியே பழக்கப்பட்டு விட்டோம் இல்லையா! அடிமைகள் சிறந்த எஜமானர்கள் ஆகு வேண்டும். எனவே அடிமையாக இருப்பதை விட்டுவிடுங்கள்.

இனிவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே ஈடிணையற்ற நமது இந்தியத் தாய் அதுவரை மற்ற எல்லா வீண் தெய்வங்களும் நம் மனத்திலிருந்து மறைந்து விடட்டும் நமது சொந்த இனம் இது ஒன்று மட்டுமே விழிப்புற்ற தெய்வம் எங்கும் அவரது கைகள் எங்கும் அவரது கால்கள் எங்கும் அவரது செவிகள் அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார் மற்ற எல்லா தெய்வங்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மைச் சுற்றிலும் காண்கின்ற விராட் தெய்வத்தை வழிபடாமல் வேறு வீண் தெய்வங்களை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இந்த தெய்வத்தை முதலில் வணங்கினால் பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம் அரை மைல் ஊர்ந்து செல்லவே முடியவில்லை அதற்குள் அனுமனைப்போல் கடலைத் தாண்ட விரும்புகிறோம். அதுமுடிகிற காரியமில்லை. எல்லோரும் யோகியாக முடியுமா? எல்லோரும் தியாணம் செய்ய முடியுமா? அது நடக்காது. நாள் முழுவதும் உலக வாழ்க்கையில் கர்ம காண்டத்துடன் அல்லாடுகிறோம்மாலையில் உட்கார்ந்து மூக்கின் வழியாகக் காற்றை இழுத்து விட்டால் எல்லாம் ஆயிற்றா? இல்லை காற்றை இழுத்தவுடன் ரிஷிகள் எல்லோரும் காற்றில் பறந்து உங்களிடம் வர வேண்டுமா? என்ன வேடிக்கை இது! சுத்த முட்டாள்தனம்.

தேவை சித்த சுத்தி , இதயத் தூய்மை. அது எவ்வாறும் வரும்? முதலில் விராட்டை அதாவது உங்களைச் சுற்றி இருபணபவர்களை வழிபடுங்கள். வழிபடுங்கள், வழிபாடு - அதுதான் அந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்குச் சரியான பொருள். வேறு எந்த வார்த்தையும் பொருந்தாது. மனிதர்கள் மிருகங்கள் எல்லாமே நம் தெய்வங்கள். நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் நம்நாட்டு மக்கள் .ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதற்குப் பதிலாக இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும் . கொடிய தீவினைப் பயனால்தான் நாம் துன்பப்படுகிறோம்: என்றாலும் நம் கண்கள் திறக்கவில்லையே!

நல்லது நாம் இன்று எடுத்துக் கொண்டுடிருக்கும் விஷயமோ மிகப் பெரியது எங்கே நிறுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனவே சென்னையில் நான் செய்ய விரும்புகின்ற சில திட்டங்களை உங்களிடம் கூறிவிட்டு என் பேச்சை நிறைவு செய்கிறேன் நமக்கு நாட்டின் ஆன்மீகக் கல்வி மீதும் லௌகீகக் கல்வி மீதும் நல்ல பிடிப்பு இருக்க வேண்டும் நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அதைக் கனவு காண வேண்டும் அதைப்பற்றிப் பேச வேண்டும் அதைச் சிந்திக்க வேண்டும் அதைச்செய்து முடிக்கவும் வேண்டும் அதுவரை நம் இனத்திற்குக் கடைத்தோறும் வழியே இல்லை.

தற்போதைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் மிக அதிகமா அந்தத் தீமைகள் இருக்கின்றன. மிக அதிகமாக தீமைகள் கொஞ்சமான நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக அது மனிதனை உருவாக்குகின்ற கல்வி அல்ல. அது முழுக்க முழுக்க வெறும் எதிர்மறையான கல்வி, எதிர்மறைக்கல்வியும் சரி, அல்லது எதிர் மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் எந்தப் பயிற்ச்சியும் சரி அது சாவை விடக் கொடியது. குழந்தையை பள்ளிக்கு அனுப்பு கிறோம். அங்கே அவன் முதலில் படிப்பது தன் தந்தை ஒரு முட்டாள் இரண்டாவது தன் பாட்டன் பைத்தியக்காரன் ; மூன்றாவாதாக தன் ஆசிரியர்கள் அனைவரும் பாசக்காரர்கள் நான்காவதாக எல்லா சாஸ்திரங்களும் பொய் இப்படித்தான் அவனதுபடிப்பு உள்ளது. அவனுக்கு பதினாறு வயதாகும்போது அவன் உயரற்ற உணர்வற்ற எதிர்மறை உணர்ச்சிகளின் ஒரு பிண்டம் போலாகிறான். விளைவு ? ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி இந்தியாவின் மூன்று முக்கிய மகாணங்களிலும் சுயசிந்தனையுள்ள ஒருவனைக்கூட தோற்றுவிக்கவில்லை அத்தகைய தனித்தன்மை வாழ்ந்தாக இங்கு இருக்கின்ற ஒவ்வொருவனும் வேறு எங்கோ கல்வி பெற்றவனாக இருக்கிறான் இந்த நாட்டில் படித்தவனாக இல்லை அல்லது நம் நாட்டில் இன்னும் ஏதோ சில இடங்களில் இருக்கின்ற பழைய பல்கலைக்கழகங்களில் மேலும் ஒருமுறை கற்று மூட நம்பிக்கைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டவனாக இருக்கிறான்.

வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி வாழ்க்கையை வளப்படுத்துகின்ற மனிதனை உருவாக்குகின்ற குணத்தை மேம்படுத்துகின்ற கருத்துக்களை ஜீரணம்செய்யதக்க கல்வியே நாம் வேண்டுவது நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துக்களை நன்கு கிரகித்து ,அவை உங்கள் வாழ்க்கையாக நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால் ஒரு புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர். யதா கரச்சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேத்தாநது சந்தனஸய - கட்டுக்கட்டாகச் சந்தனக் கட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதை அதன் பாரத்தை மட்டுமே உணர்கிறது மதிப்பை அறிவதில்லை செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள் கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள் ! எனவே நம் நாஙட்டன் ஆன்மீகம் மற்றும் லௌகீகக் கல்வி எல்லாமே நம் சொந்தக் க=கைகளில் இருக்க வேண்டும் முடிந்தவரை அது தேசிய வழியிலும் தேசிய அமைப்புகளின் மூலமும் தரப்பட்ட வேண்டும்.

இது மிகப்பெரிய விஷயம், மிகப் பெரிய திட்டம் தான். இதை என்றைக்காவது செயல்படுத்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வேலையை நாம் கட்டாயம் தொடங்கியதாக வேண்டும் . ஆனால் எப்படி? உதாரணத்திற்குச் சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு அவசியம் ஒரு கோயில் வேண்டும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை முதலில் வேண்டியது மதம், அப்படி என்றால் பிற நெறியினர் அதுபற்றிச் சண்டையிடுவார்களே என்று நீங்கள்சொல்லாம். ஆனால் நாம் அதை எந்த நெறியும் சாராத கோயிலாகக் கட்டுவோம் எல்லா பிரிவினரும் ஏற்றுக்ö காள்ளக்கூடிய ஓம் மட்டுமே அங்கே சின்னமாக இருக்கும் எந்தப் பிரிவாவது ஓம் என்பதைச் சின்னமாக வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கருதுமானால் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளும் உரிமை அதற்குக் கிடையாது தங்கள் நெறியின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்து மதத்தை விளக்க எல்லோருகும் உரிமைஉண்டு. ஆனால் கட்டாயமாக நமக்கு பொதுக் கோயில்கள் வேண்டும். நீங்கள் விரும்பு கின்ற விக்கிரகங்கள் மற்றும் சின்னங்கள் எல்லாவற்றையும் மற்ற இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கொள்கையிலிருந்து மாறுபடுபவர்களுடன் அதைச் குறித்து இங்கே சண்டையிடக்கூடாது . இங்கே நமது பல்வேறுணு நெறிகளுக்கும் பொதுவான அடிப்பபடைகள் போதிக்கப்பட வேண்டுமுஞூ அதே வேளையில் வெவ்வேறான நெறியினர் எல்லோருமே இங்கே வந்து தங்கள் கோட்பாடுகளைப் போதிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். இருக்க வேண்டிழய ஒரே கட்டுப்பாடு எந்தப் பிரிவும் மற்றொன்றுடன் சண்டையிடக் கூடாது என்பது மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள் உலகத்திற்கு அது தேவை ஆனால் நீங்கள் பிறரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்க உலகத்திற்கு நேரமில்லை, அதை நிங்களே வைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக அந்தக் கோயிலோடு தொடர்புடைய ஒரு பயிற்சி நிலையம் இருக்க வேண்டும் நம் மக்களுக்கு மத போதனை செய்யவும் பொதுக் கல்வியை அளிக்கவும் ஆசிரியரிகளுக்கு அதில் பயிற்சி அளிக்க வேண்டும் அவர்கள் இரண்டையுமே கற்பிக்க வேண்டும் நாம் ஏற்கனவே வீடுகள் தோறும் சென்று மதக் கல்வி அளித்தே வருகிறோம் அதனுடன் பொதுக் கல்வியையும் எடுத்துச் செல்வோம் இதை எளிதாகச் செய்ய முடியும் பிறகு இந்த ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் மூலம் இந்த வேலை விரிவடையும். இத்தகைய கோயில்களை மற்ற இடங்களிலும் நிறுவ வேண்டும் . படிப்படியாக இந்தியா முழுவதும் இது போன்ற கோயில்கள் உருவாக வேண்டும் இதுதான் என் திட்டம் இது மாபெரும் ஒன்றாகத் தோன்றலாம் ஆனால் இது மிகவும் தேவையான ஒன்று இதற்கான பணம் எங்கே என்று நீங்கள் கேட்கலாம், பணம் தேவையில்லை பணம் என்பது ஒன்றுமே இல்லை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தேவையான பணமும் மற்ற எல்லாமே என்னிடம் வந்து கொண்டுதான் இருக்கிறது ஏனென்றால் அவை என் அடிமைகள் நான் அவைகளின் அடிமை அல்ல பணமும் பிறவும் கட்டாயம் வரும், கட்டாயம் இதுதான் வார்த்தை. ஆனால் மனிதர்கள் எங்கே? இதுவே கேள்வி.

சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவிசாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொரு வருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும். குழந்தையாக இருந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கை, இப்போது நான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதுபோன்ற அசைக்க முடியாதநம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். அத்தகைய மகத்தான நம்பிக்கையை ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களானால். இந்தியா முழுவதையும் நீங்கள் புதுப்பித்து விடலாம். ஆகா! அதன்பிறகு சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் நாம் போவோம் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உருவாக்குகின்ற பல சக்திகளுள் ஒன்றாக நமது கருத்துக்களும் விளங்கும் இந்தியாவிலும் வெளியிலும் இருக்கின்ற ஒவ்வோர் இனத்தின் வாழ்க்கையிலும் நாம் புகு வேண்டும் இதற்காக இப்போது நாம் பாடுபட்டாக வேண்டும்.

அதற்காக எனக்கு இளைஞர்கள் தேவை, இளமையும் வலிமையும் ஆரோக்கியமும் கூர்மையான அறிவும் உள்ளவர்களே இறைவனை அடைய முடியும் என்று வேதங்கள் கூறுகின்றன எதிர்காலத்தைப்பற்றி முடிவுசெய்ய ஏற்ற தருணம் உங்களிடம் இளமைத் துடிப்பு ததும்புகின்ற இந்த நேரம்தான் களைத்து ஓய்ந்து போகும் போது அல்ல. இளமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும் இந்த நேரம்தான் உங்கள் எதிர் காலத்தைத் தீர்மானிப்பதற்கு உரிய நேரமாகும். வேலை செய்யுங்கள் அதற்கான நேரம் இதுதான் புத்தம் புதிய தொடப்படாத முகரப்படாத மலர்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளில் சமர்பிக்கப்படும் அத்தகைய மலர்களையே அவர் ஏற்றுக்கொள்கிறார். எனவே கிளர்ந்தெழுங்கள். வாழ்க்கை குறுகியது. வழக்கறிஞர்களாகி சண்டைசச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற வேலைகளை விட நாடுவதற்கான மகத்தான வேலைகள் பல உள்ளன. உங்கள் இனத்தின் நன்மைக்காக மனித சமுதாயத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களைத் தியாகம் செய்து கொள்வது அவற்றைவிட எவ்வளவோ உயர்ந்த வேலை!

இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது ? நீங்கள் இந்துக்கள். வாழ்க்கை நிலையானது என்பதில் இயல்பானதொரு நம்பிக்கை உங்களிடம் இருக்கும் சில நேரங்களில் இளைஞர்கள் சிலர் என்னிடம் வந்து நாத்திகம் பேசுகிறார்கள், ஓர் இந்து நாத்திகன் ஆவான் என்பதை நான் நம்பவில்லை அவன் ஐரோப்பிய புத்தகங்களைப் படிக்கலாம் தன்னை ஓர் உலகாயதனாகக் கருதவும் செய்யலாம் ஆனால் அவையெல்லாம் குறுகிய காலத்திற்குத்தான். நாத்திகம் உங்கள் ரத்தத்தில் இல்லை. உங்கள் அமைப்பில், உங்களுள் இல்லாத ஒன்றை உங்களால் நம்ப முடியாது. அப்படி நீங்கள் நம்ப முயல்வது ஒரு பயனற்ற வேலை . அத்தகைய காரியங்களைச் செய்ய முயலாதீர்கள். நான் இளைஞர்னாக இருந்தபோது ஒரு முறை நானும் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் முடியவில்லை, வாழ்க்கை குறுகியது: ஆன்மா அழியாதது என்றும் இருப்பது ஒன்று மட்டும் நிச்சயம் அது மரணம் எனவே உயர்ந்ததோர் லட்சியத்தைக் கைக்கொள்வோம் அதற்காக நம் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்போம். இது நமது தீர்மானமாக இருக்கட்டும் தன் மக்களின் மோட்சத்திற்காக மீண்டும் மீண்டும் வருகின்ற இறைவன் இவை நமது சாஸ்திரங்களின் வார்த்தைகள் - மகத்தான அந்த ஸ்ரீகிருஷ்ணர் நம்மை ஆசீர்வதிப்பாராக நம் லட்சியங்கள் நிறைவேறும் பாதையில் அழைத்துச் செல்வாராக! 

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,