விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-5)


விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-5)
இது திரும்பத்திரும்ப நடந்துள்ளது. உலகில் தேவை ஏற்பட்டபோதெல்லாம் வற்றாத இந்த ஆன்மீகப் பெருவெள்ளம் பொங்கிப் பாயந்து சென்று உலகை நிரப்புகிறது. போர்ப்பறையின் முழக்கங்களோடும் படைகளின் அணிவகுப்போடும் அரசியல் அறிவு தரப்படலாம் நெருப்பு மற்றும் வாளின் துணையுடன் உலக அறிவும் சமுதாய அறிவும் தரப்படலாம். ஆனால் ஆன்மீக ஞானமோ, பிறர் காணாமல் எவ்வித ஓசையும் இன்றிமெல்லெனப் பெய்தாலும் ரோஜா மலர்களை மலர்ந்து விகசிக்கச் செய்கின்ற பனித்துளிபோல், அமைதியான முறையில் மட்டுமே தர முடியும். திரும்பத் திரும்ப உலகத்திற்கு இந்தியா தந்து வந்துள்ள தானம் இதுவாகும்.

ஒரு மகத்தான இனம் உலகை வென்று, நாடுகளுக்கிடையே பாதைகளையும் பயணத்தையும் ஏற்படுத்தி, அவற்றை இணைக்கும் போது இந்தியா எழுந்து ஒருங்கிணைந்த உலகத்தின் முன்னேற்றத்தில் தன் பங்கான ஆன்மீக சக்தியை அளித்து வருகிறது. புத்தர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது. அதற்கான சாட்சியங்கள் சீனா, ஆசியா மைனர் மற்றும் மலாயா தீவுகளின் மையங்களில் இன்றும் காணப்படுகின்றன. கிரேக்கப் பெருவீரனான அலெக்சாண்டர், தன்வெற்றியால் அன்று அறியப்பட்ட உலகின் நான்கு எல்லைகளையும் இணைத்தபோது இது நிகழ்ந்தது. அப்போது இந்திய ஆன்மீகம் உலகம் முழுவதிலும் பாய்ந்து பரந்தது. இன்று பெருமையடித்துக் கொள்கின்ற மேலைநாட்டு நாகரீகம் இப்படிச் சென்றதில் எஞ்சிய பகுதிதான் அத்தகைய வாய்ப்பு இப்போது மீண்டும் வந்துள்ளது. இங்கிலாந்தின் அதிகாரம் உலக நாடுகளை, இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் இணைத்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் சாலைகளும் தொடர்பு வசதிகளும் உலகின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரை பரவியுள்ளது. ஆங்கிலேய அறிவுத்திறனின் காரணமாக இன்றைக்கு உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இன்று வியாபார மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிந்தோ அறியாமலோ இந்தியா உடனடியாக எழுகிறது. தனது ஆன்மீகச் செல்வங்களை மழையெனப் பொழிகிறது. அந்தப் பெருவெள்ளம் இந்தப் பாதைகளின் வழியாகப் பாய்ந்துசென்று உலகின் மறுகோடியை அடைகிறது.

நான் அமெரிக்கா சென்றது என் செயல் அல்ல, உங்கள் செயலும் அல்ல. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற இறைவன்தான் என்னை அனுப்பினார்; என்னைப் போன்ற நூற்றுக்கணக்கானோரை எல்லா நாடுகளுக்கும் அனுப்ப போகிறார். உலகின் எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்க முடியாது. இதையும் செய்வதாக வேண்டும். உங்கள் மதத்தைப் பிராச்சாரம் செய்வதற்காக, நீங்கள் நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும். சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதரிடமும் அதைப் பிரச்சாரம் செய்தாக வேண்டும். நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இதுதான். ஆன்மீக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலக அறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைக் தெளிவாக சொல்லி கொள்கிறேன். அது மக்களிடம் எந்தக் தாக்கத்தையும் ஒரு போதும் ஏற்படுத்தாது. மகத்தான பௌத்த இயக்கத்தின் தோல்விக்குக்கூட இதுவும் ஒரு காரணம்.

எனவே என் நண்பர்களே, நம் சாஸ்திர உண்மைகளை இந்தியாவிலும் வெளியிலும் பிரச்சாரம் செய்ய நமது இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இந்தியாவில் சில இயக்கங்களைத் துவக்குவதுதான் என் திட்டம். மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்தான் தேவை. மற்ற எல்லாம் தயாராகிவிடும். ஆற்றல் மிக்க தீவிரமான, நம்பிக்கையுள்ள, மனசாட்சிக்கு மாறாக நடக்காத இளைஞர்கள் இத்தகைய நூறு பேர் போதும். உலகையே புரட்டி விடலாம். எல்லாவற்றைவிடவும் சங்கல்பம் வலிமை வாய்ந்தது. அதன்முன் எல்லாம் அடிபணிந்தே ஆக வேண்டும், ஏனெனில் அது கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது. தூய ஆற்றல் மிக்க சங்கல்பம் எல்லாம் வல்லது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையா?

பரப்புங்கள், உங்கள் மதத்தின் மகத்தான உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புங்கள். உலகம் அவற்றிற்காகக் காத்திருக்கிறது. மக்களை இழிந்தவர்களாக்கும் கொள்கைகளே பல நூற்றாண்டுகளாகப் போதிக்கபட்டு வந்துள்ளன. மக்கள் எதற்குமே உதவாதவர்கள் என்று போதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதுமே, பாமரர்கள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல என்றுதான் அவர்களிடம் கூறப்பட்டு வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகப் பயமுறுத்தி பயமுறுத்தியே அவர்கள் ஏறக்குறைய மிருகங்களாகிவிடும் நிலைக்குச் அவர்கள் சென்றுவிட்டனர். ஆன்மா என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட அவர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. அவர்கள் ஆன்மாவைப்பற்றிக் கேள்விப்படட்டும்- தாழ்ந்தவருள் தாழ்ந்தவரிலும் ஆன்மா உள்ளது, அது இறப்பதோ பிறப்பதோ இல்லை , அந்த ஆன்மாவை வாள் வெட்ட முடியாது; நெருப்பு எரிக்க முடியாது. அது தோற்றமும் முடிவும் இல்லாதது, முற்றிலும் தூய்மையானது, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது.

முதலில் உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். உங்களுக்கு ஆங்கிலேயர்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? தங்கள் மதம் கடமை என்றெல்லாம் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அந்த வித்தியாசம் என்னவென்று தெரிந்துவிட்டது. அது இதுதான்; ஆங்கிலேயன் தன்மை நம்புகிறான், நீங்கள் உங்களை நம்பவில்லை. தான் ஆங்கிலேயன், எனவே தான் விரும்புகின்ற எதையும் தன்னால் செய்ய முடியும் என்பதை அவன் நம்புகிறான். அது அவனுள் இருக்கம் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துகிறது, அவனும் தான் விரும்பியதைச் செய்து முடிக்கிறான். ஆனால் உங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று தான் உங்களுக்குச் சொல்லப்படுகிறது, போதிக்கப்படுகிறது. நீங்களும் நாளுக்குநாள் எதற்குமே பயனற்றவர்களாகி வருகிறீர்கள். நமக்குத் தேவை வலிமையே; எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.

நாம் பலவீனர்களானோம், அதானால்தான் ரகசியவாதங்களும் ரகசிய வித்தைகளுமாகிய அற்ப விஷயங்கள் எல்லாம் நம்மிடம் வந்தன. அவைகளில் சிறந்த உண்மைகூட இருக்கலாம். ஆனால் அவை ஏறக்குறைய நம்மை அழித்தேவிட்டன. உங்கள் நரம்புகளையும் வலிமையாக்கி கொள்ளுங்கள். இரும்பாலான தசையும் எஃகாலான நரம்புகளுமே நமக்குத் தேவை. காலங்காலமாக அழுதுவிட்டோம். இனியும் அழுகை கூடாது. சொந்தக் காலில் நில்லுங்கள், மனிதர்கள் ஆகுங்கள். மனிதனை உருவாக்ககின்ற ஒரு மதமே நமக்குத் தேவை மனிதனை உருவாக்குகின்ற கொள்கைகளே நமக்குத் தேவை. எல்லா வகையிலும் மனிதனை உருவாக்கும் கல்வியே நமக்க வேண்டும். உண்மையை அறிந்து கொள்வதற்கான சோதனை இதோ இதுதான்: ஏதாவது ஒன்று உங்கள் உடலலை அறிவை, ஆன்மீக உணர்வைப் பலவீனமாக்குமானா ல் அதனை விஷமென ஒதுக்குங்கள், அதில் உயிர்த் துடிப்பில்லை, அது உண்மையாக இருக்க முடியாது. உண்மையே வலிமை தரும். உண்மையே தூய்மை. உண்மையே எல்லா அறிவும். உண்மையே வலிமை தருவதாக இருக்கும், அறிவை ஒளிரச் செய்வதாக இருக்கும் அக ஆற்றலை வளர்ப்பதாக இருக்கும்.

இந்த ரகசிய வித்தைகளுள் ஏதோ சிறிய அளவில் உண்மை இருக்கலாம். ஆனாலும் அவை பொதுவாகப் பலவீனத்தையே வளர்க்கின்றன. அதில் நீண்டகால அனுபவம் உடையவன் நான். நான் சொல்வதை நம்புங்கள். அதிலிருந்த நான் பெற்ற ஒரே முடிவு அது பலவீனத்தைத் பயணம் செய்திருக்கிறேன், ஏறக்குறைய இங்குள்ள எல்லா குகைகளிலும் தேடியிருக்ககிறேன், இமயமலையில் வசித்தவர்களை எனக்குத் தெரியும். நான் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதிருப்பதை விடத் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதிருப்பதைவிடத் தாழ்ந்தவர்களாக, பலவீனர்களாக நீங்கள் மாறுவதை என்னால்பார்க்க முடியாது உங்களுக்காகவும் உண்மையின் பொருட்டும் நான் கடமைப்பட்டுள்ளேன் ஆகவேதான் என் இனம் இழிநிலையை அடைவதை எதிர்த்து, போதும், போதும் என்று கதறுகிறேன்.

பலவீனப்படுத்துகின்ற இந்த ரகசிய வித்தைகளை விட்டுத் தள்ளுங்கள். வலிமை உடையவர்களாகுங்கள். ஒளி வீசுகின்ற, வலிமை தருகின்ற, மேலான தத்துவமாகிய உங்கள் உபநிடதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இந்த எல்லா ரகசிய வித்தைகளிலிருந்தும் எல்லா பலவீனப் பொருட்களிலிருந்தும் விலகிவிடுங்கள். உபநிடதத் தத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மகத்தான உண்ளைகள் மிகவம் எளிமையாகவே இருக்கின்றன. நீங்கள் உயிர் வாழ்வதுஎன்பது எவ்வளவு எளிமையான உண்மை! அதுபோல்தான் உபநிடத உண்மைகள் உங்கள் முன்னால் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது இந்தியாவின் கதிமோட்சம் உறுதி.

இன்னும் ஒரு வார்த்தை, அத்துடன் என் சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன். எல்லோரும் தேசப்பற்றைப்பற்றிப் பேசுகிறார்கள். நானும் தேசப்பற்றில் நம்பிக்கை உள்ளவன், தேசப்பற்றைப்பற்றி எனக்கென்று சொந்தக் கருத்தும் உண்டு எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை. முதலில் இதயபூர்வமான உணர்ச்சி. அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன இருக்கிறது? அது சில அடிகள் செல்லும் பிறகு நின்றுவிடும் ஆனால் இதயத்தின் மூலம்தான் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லா ரகசியங்களுக்கும் வாசல் அன்புதான்.

எனவே உணர்ச்சி கொள்ளுங்கள், என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேச பக்தர்களே நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடி பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக்கணக்கானோர் வாடுவதையும் காலங்காலமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் துடிப்பதையும் உணர்கிறீர்களா? இந்த நாட்டின்மீது ஒரு கரிய மேகம் போல் அறியாமை கவிந்துள்ளதை உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிதா? இந்த உணர்ச்சி உங்களைத் தூக்கம் கெட்டு வாடச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடிநரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? இது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? அழிவுத்துன்பம் என்ற ஒரே கருத்து உங்களைப் பற்றிப்பிடித் துள்ளதா? உங்கள் பெயர், உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சொத்து, ஏன் உங்கள் உடம்புபோன்ற எல்லாவற்றையும் மறந்த விட்டீர்களா? இதை நீங்கள் செய்துவிட்டீர்களா? இதுதான் தேசப் பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி, வெறும் முதற்படி இது.

சர்வசமயப்பேரவையி ல் கலந்துகொள்வதற்காக வென்று நான் அமெரிக்கா போகவில்லை, உங்களுள் பலரும் இதை அறிவீர்கள். என்னுள் என் உயிரினுள் நிலவிய இந்த உணர்ச்சி என்ற பூதம் என்னை ஆட்டிப் படைத்தாலேயே நாலன் செல்ல நேர்ந்தது, என் நாட்டு மக்களுக்கு உயைப்பதற்கான வயி தேடி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் அலைந்தும், வழி யேதும் கடைக்காததால் அமெரிக்கா சென்றேன் அப்பொழுது என்னை அறிந்த பெரும்பாலோருக்கு இது தெரியும். இந்த சர்வசமயப் பேரவையைப்பற்றி இங்கு யாருக்கு அக்கறை? என் தசையாகவும் ரத்தமாகவும் இருக்கின்ற மக்கள் இங்கே ஒவ்வொரு நாளும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்பட்டார்கள்? இதுதான் என் முதல்படி.

நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்பதரற்குப் உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங்களைத்தணிக்கின்ற சில இதமான வாரித்தைகளைக் கூறுவதற்கு, அவர்கள் நடைப்பிணங்களாகிக் கிடக்கும் கேவல நிலையிலிருந்து சீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா?

அதோடும் தேசப்பற்று முடிந்து விடுவதில்லை. மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா? கைகயில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த்தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும் உங்கள் பெயர் அழிந்து செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றி நிற்பீர்களா? அதையே உறுதியாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரி மன்னர் கூறியது போல், மகான்கள் பழிக்கட்டும் அல்லது புகழட்டும் அதிர்ஷ்ட தேவியான மகாலட்சுமி வரட்டும் அல்லது அவள் விரும்புகின்ற இடத்திற்குச் செல்லட்டும் மரணம் இன்று வரட்டும் அல்லது நூறு ஆண்டுகள் கழித்த வரட்டும்- எது நேர்ந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து அங்குலம்கூட விலகாதவனே உண்மை மனிதன் . இத்தகைய உறுதி உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். செய்தித்தாள்களில் எழுத வேண்டியதில்லை, மேடையேரி பிரசங்கம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் முகமே ஒளி வீசித்துலங்கும். நீங்கள் ஒரு குகையுள் வாழலாம்; ஆனால் உங்கள் சிந்தனைகள் அந்தப் பாறைச் சுவர்கள் வழியாக ஊடுருவி வந்து உலகம் முழுவதுமே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அதிர்ந்து பரவிக் கொண்டிருக்கும். என்றாவது அவை ஏதாவதொரு மூளையில் புகுந்து செயல்படும். உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனையின் ஆற்றல் அத்தகையது.

உங்களை நெடுநேரம் காக்க வைக்கிறேனோ என்று நான் அஞ்சுகிறேன். இன்னும் ஒரு வார்த்தை. என் நாட்டு மக்களே, என் நண்பர்களே, என் குழந்தைகளே, நம் நாடாகிய இந்தக் தேசியக் கப்பல் லட்சக்கணக்கானோரை வாழ்க்கைப் பெருங்கடலைக் கடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக இது நல்ல முறையில் இந்தக் கடலைக் கடந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக லட்சோபலட்சம்பேர் பேரின்பமாகிய கரைக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றனர். ஆனால் இன்றோ, ஒருவேளை உங்கள் சொந்தத் தவறின் காரணமாக இந்தக் கப்பல் சிறிது பழுதடைந்துள்ளது, ஓட்டைகள் விழுந்திருக்கிறது. அதற்காக அதைச் சபிப்பீர்களா? இந்த உலகத்தில் வேறு எதைவிடவும் அதிகமாக உழைத்துள்ள இந்த தேசியக் கப்பலின்மீது சாப மழையைப் பொழிவது உங்களுக்குத் தகுதியானதா? தேசியக் கப்பலில், நம் சமூகமாகிய அந்தக் கப்பலில் ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா! நாம் சென்று அந்த ஓட்டைகளை அடைப்போம். நம் இதய ரத்தத்தைக் கொட்டி, மகிழ்சியோடு அந்தக் காரியத்தைச் செய்வோம். முடியவில்லை என்றால் எல்லோரும் இறப்போம். நம் மூளைகளைக் கொண்டு அடைப்பான் செய்து அந்த ஓட்டைகளை அடைப்போம். ஆனால் அதை ஒரு போதும் நிந்திக்க வேண்டாம். இந்தச் சமூகத்திற்கு எதிராக ஒரு கடின வார்த்தைகூடப் பேசாதீர்கள், நான் அதை அதன் கடந்தகால மகோன்னதத்திற்காக நேசிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள், மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள். நான் எப்படி உங்களை சபிக்க முடியும்? ஒரு போதம் முடியாது.

எல்லா ஆசிகளும் உங்கள் மீது பொழிவதாக! என் குழந்தைகளே, என் திட்டத்தைச் சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டால் நானும் உங்களோடு சேர்ந்து பணி புரியத்தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் கேட்காமல் என்னை உதைத்து இந்தியாவிற்கு வெளியேதுரத்தினால் கூட நான் எல்லோரும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வேன். உங்களோடு ஒரு வனாகக் கூடியிருக்கவே நான் எல்லோருமே சேர்ந்து மூழ்குவோம். ஆனால் நம் உதடுகளிலிருந்து சாபங்கள் வராமல் இருக்கட்டும்!

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,